Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி, ஏப்.25:- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும், இணைய வழியில் மின் கட்டணம் செலுத்தும் வழிமுறைகள் குறித்த, விழிப்புணர்வினை ஏற்படுத்திட உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று முற்பகலில், திருநெல்வேலி நகர்புறக் கோட்டத்தில் மேலப்பாளையம் பிரிவு ஒன்றுக்கான அலுவகத்தில், மின் கட்டணம் செலுத்த வரும் மின் நுகர்வோர்களிடம், இணைய வழியில் மின் கட்டணம் செலுத்திடும் வழிமுறைகள் குறித்து, விரிவாக எடுத்துரைத்தனர். இந்த முறையினால், மின் கட்டணம் செலுத்துவதற்காக, மின்துறை அலுவலகத்திற்கு வந்து திரும்பும் பயணமும், கால விரையமும் தவிர்க்கப்படுகின்றன. இந்த திட்டத்தினால், எரிபொருள் சேமிக்கப்படுவது பற்றிய, முக்கியத்துவம் குறித்தும், மின்வாரிய அலுவலர்கள், எளிய நடையில், எடுத்துக் கூறினர்.